நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்..!!

0
110
#image_title

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்..!!

மார்பு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத மார்பு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும்.

மார்பு சளிக்கான அறிகுறிகள்:-

அதிக சளி,வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவல்லி

*இஞ்சி

*மிளகு

*தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் இடித்து வைத்துள்ள இஞ்சி, கரு மிளகு துள் மற்றும் நறுக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலைகளை சேர்த்து கொதிக்க விடவும். இவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். இவ்வாறு மார்பில் தேங்கி கிடந்த நாள்பட்ட சளி முழுவதும் கரைத்து நாசி மற்றும் மலம் வழியாக வெளியேறிவிடும்.