இந்த 8 நகராட்சிகளில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு… ஏப்ரல் 10 வரை விடுமுறை அறிவிப்பு…!

0
100
School

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொற்றின் தீவிரம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பரவல் 1,276 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அகமதாபாத், வதோரா, சூரத், ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த ஊரடங்கு இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இருந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அகமதாபாத் நகரில் உள்ள உயிரியல் பூங்காக்கள்,நீச்சல் குளங்கள், மாநகராட்சி பூங்காக்கள், தியேட்டர்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றையும் இம்மாதம் 31-ந்தேதி வரை காலவரையின்றி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அகமதாபாத் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து மற்றும் விரைவு பேருந்து சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் குஜராத்தில் உள்ள 8 நகராட்சிகளில் பள்ளிகளை ஏப்ரல் 10ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜுனகத், ஜாம்நகர் மற்றும் பாவ்நகர். அதேபோல் அந்த பகுதி பள்ளிகளில் நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளை ரத்து செய்வதகாவும் குஜராத் மாநில கல்வி அமைச்சர் பூபேந்திர சுதஸ்மா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.