கனமழை காரணமாக மலை கோயிலுக்கு செல்லும் பாதை அடைப்பு!! அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாதா வைஷ்ணோ தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்துகளின் பாரம்பரிய கோவில்களில் ஒன்றாகும். மேலும் வைஷ்ணோ தேவி கோவில் மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் முக்கிய புனித்த தளங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் 5200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
மேலும் கத்ரா என்ற பகுதியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதனையடுத்து ஆண்டு தோறும் 8 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். அதனை தொடர்ந்து இந்த கோயிலுக்கு செல்ல பாதைகள் உள்ளது. மேலும் பக்தர்கள் வைஷ்ணோ தேவி கோயிலில் வழிபாடு செய்ய ஆண்டு தோறும் செல்வது வழக்கமான ஒன்று.
இந்த நிலையில் ரியாசி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் கோயிலுக்கும் செல்லும் புதிய பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் 43 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாதைகள் மூடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் பழைய பாதை திரிகுடா மலை பகுதி வழியில் செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். நிலச்சரிவு அபாயம் உள்ளதால் புதிய பாதை மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள். அதனையடுத்து ஜூலை 31 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.