Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

#image_title

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

தற்பொழுது 30 வயதை தண்டி விட்டாலே பல வயதானது போன்ற பிம்பம் தோன்றிவிட்டது. இதற்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமையே காரணம். முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதை பிரண்டை, எள், கோதுமை, உளுந்து உள்ளிட்ட பொருட்கள் மூலம் சரி செய்து இளம் பருவத்தில் உள்ள நபர்களை போல் முதுமை காலத்திலும் வாழலாம்.

தேவையான பொருட்கள்…

*பிரண்டை
*தயிர்
*கருப்பு எள்
*கோதுமை
*கருப்பு உளுந்து

செய்முறை…

ஒரு கப் சுத்தம் செய்த பிரண்டையை தயிரில் ஒரு இரவு ஊற போட்டு மறுநாள் நன்கு காய வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கருப்பு உளுந்து போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விட்டு மறுநாள் அதை காய வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து காயவைத்த பிரண்டையை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.

அதேபோல் 1 கப் கருப்பு எள், 1 கப் கோதுமை, 1 கப் கருப்பு உளுந்து எடுத்து தனி தனியாக வறுத்துக் கொள்ளவும்.

இந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடியாக்கி சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 400 மில்லி தண்ணீர் ஊற்றி 4 ஸ்பூன் அளவு பிரண்டை கலவை பொடி சேர்த்து கைவிடாமல் காய்ச்சவும். இவ்வாறு செய்தால் கஞ்சி பதத்திற்கு வரும்.

இந்த கஞ்சியை ஆறவிட்டு சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி, எலும்பு பாதிப்பு, மூட்டு வலி, கண் பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு, தோல் வியாதி அனைத்தும் குணமாகும்.

Exit mobile version