Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக  நான் இருகின்றேன்!

Elon Musk's next action! I am the CEO!

Elon Musk's next action! I am the CEO!

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக  நான் இருகின்றேன்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இலான் மஸ்க் நீக்கினார். அதனையடுத்து டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார்.

அதனையடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளர்.டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அந்த எண்ணிக்கையின் ஆள்குறைப்பு நடவடிக்கையின் மூலம் இரண்டாயிரமாக குறைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ப்ளூ  டிக் கணக்குகளுக்கு மாதம் ரூ 400 வசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதனை உயர்த்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.பொதுவாக பிரபலமான நபர்கள் ,புகழ்பெற்றவர்கள் உள்ளிட்டோரின் டுவிட்டர் பக்கம் அவரவர்களின் அதிகாரபூர்வ பக்கம் என்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் ப்ளூ டிக் வசதி அமைந்துள்ளது.

அந்த வசதியை பெறுவதற்கு தற்போது ரூ 400கட்டணம் செலுத்தி வந்த நிலையில் அதனை ரூ 1600 ஆக உயர்த்த எலான் மஸ்க்  திட்டமிட்டுள்ளார்.அதனையடுத்து தற்போது டுவிட்டர் இயக்குநர் குழுவை எலான் மஸ்க்  அதிரடியாக நீக்கியுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் உள்ள 9 பேரையும் ஒரே அறிவிப்பில் நீக்கி அவர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தான்  இருப்பதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.இதற்கு முன்பு டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை அவர் நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version