Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..! தமிழக அரசு!

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தமிழக அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நாளை முதல் ஒவ்வொரு தனிமனிதரும் பாதுகாப்போடு வழிபாட்டு தலங்களுக்கு செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version