ஹெட்செட் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய்!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நிபுணர்கள்!!

0
94

அதிக நேரம் புளுடூத் ஹெட்செட்டை பயன்படுத்தினால் கேன்சர் நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்ற ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ஹெட்செட் மாட்டிக் கொள்ளாமல் இருப்பவர்களை விடவும், ஹெட்செட் அதிகமாக உபயோகப்படுத்தும் நபர்கள் தான் உள்ளனர். மேலும் இங்கு அனைவருடைய காதிலும் ஒவ்வொரு வகையான மாடல் மற்றும் கலர்களில் ஹெட்செட்டை காண முடிகிறது. ஆனால் இது மிக ஆபத்தான ஒன்று என யாருக்கும் தெரியவில்லை.இதில் இருக்கும் ஆபத்து தெரியாமல் அனைவரும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

அதாவது அதிக நேரம் ஹெட்செட்டை பயன்படுத்துவதால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், புளுடூத் ஹெட்செட்டை பயன் படுத்துவதால் மூளை புற்றுநோய் ஏற்பட கூடும் என மருத்துவர்கள் அனைவரையும் எச்சரித்து உள்ளனர். ஹெட்செட் எப்பொழுதும் காதுகளில் இருப்பதால், காதுகளில் உள்ள மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மூளை புற்றுநோய் ஏற்படும்.

இதனை அடுத்து, அது மட்டுமில்லாமல் ஞாபக மறதி, கற்றல் குறைபாடுகள், நரம்பு நோய்கள் மற்றும் குழந்தை இன்மை போன்ற பிரச்சனைகள் அனைத்தும் ஏற்படும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து கூறுகின்றனர். அதன் காரணமாக புளுடூத் ஹெட்செட்டை நீண்ட நேரம் பயன்படுத்துவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.