EYE STROKE: என்னது கண்களில் பக்கவாதம் வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!!

0
172
EYE STROKE: Will I have a stroke in my eyes? Here are its symptoms and solutions!!

EYE STROKE: என்னது கண்களில் பக்கவாதம் வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!!

கண்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உறுப்புகளில் ஒன்று.கண்களை சூடானால் எரிச்சல்,கண் கட்டி,கண் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.தற்பொழுது கோடை காலம் என்பதால் அதிக வெப்ப அலைகள் உருவாகி அவை கண்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது.இந்த கடுமையான வெப்பத்தால் கண்களில் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை மக்கள் சந்திக்க தொடங்கியுள்ளனர்.ஹீட் ஸ்ட்ரோக் போலவே இந்த கண் பக்கவாதமும் உடல் மற்றும் கண்கள் அதிகளவு உஷ்ணமாவதால் ஏற்படுகிறது.

கண் பக்கவாதம் யாருக்கு வரும்?

ஒவ்வாமை,கண்களில் வீக்கம்,கண்களில் வறட்சி,விழித்திரையில் இரத்தக் கட்டிகள் உள்ளவர்களுக்கு கண் பக்கவாதம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கண் பக்கவாதம் அறிகுறிகள்:

*கண்ணைச் சுற்றி சாம்பல் புள்ளிகள்
*மங்கலான கண் பார்வை
*பார்வை இழப்பு
*கண்களில் வலி மற்றும் அழுத்தம்
*விழித்திரையில் சிவப்பு புள்ளிகள்

கண் பக்கவாதத்தில் இருந்து தப்பிக்க வழி:

அடிக்கடி கண்களை சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

காலையில் உலர் திராட்சை,உலர் அத்தி பழம் சாப்பிட வேண்டும்.

காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிட வேண்டும்.

தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை கீரை உணவு சாப்பிட வேண்டும்.

கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்ய வேண்டும்.வெள்ளரி துண்டுகளை கண்களில் மீது வைத்து கண்களுக்கு ஓய்வு ஓ=கொடுக்க வேண்டும்.