Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்!

Famous actor donates Rs 1.5 crore to film industry

Famous actor donates Rs 1.5 crore to film industry

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினால் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை கடந்து வாழ்ந்து கொண்டு உள்ளனர்.இந்நிலையில் மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க முழு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.

நோய் தொற்று குறைந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அரசின் பொருளாதாரமும் மோசமாகவே உள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் யாஷ்.இவர் பெங்கலூரில் பிறந்தார்.பின் பியுசி முடித்து டிராமாவில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.2010 முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2018 ம் ஆண்டு இவர் நடித்த கே.ஜி.எப்.1 மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.இந்த படத்தின் வசூல் மட்டும் 250 கோடியை எட்டியது.

தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவர உள்ள நிலையில், கொரோனா தொற்றில் படபிடிப்புகள் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் 3000 கன்னட தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட வங்கி கணக்குகளில் தலா 5000 என தனது சொந்த பணத்தை செலுத்தி உள்ளார்.மொத்தமாக ரூ.1.5 கோடி அவர்களுக்கு வழங்கி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும் போது இந்த மோசமான நிலையில் அவர்களது வேதனையை முழுமையாக போக்க இந்த பணம் தீர்வாகாது என்றாலும், நம்பிக்கைக்கான வெளிச்சம் ஆக இருக்கும் என நடிகர் யாஷ் கூறினார்.

Exit mobile version