Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண் தாசில்தாரை கொலை செய்த விவசாயி மர்ம மரணம்!

தெலுங்கானா மாநிலம் அப்துல்லாபூர்மெட் என்ற பகுதியைச் சேர்ந்த தாசில்தார் விஜயா ரெட்டி என்பவர் தனது அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவரை பார்க்க வந்த சுரேஷ் என்ற விவசாயி திடீரென அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தீ வைத்தார்.

இந்த சம்பவத்தில் விவசாயி சுரேஷுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தீயால் எரிந்து கொண்டிருந்த தாசில்தாரை காப்பாற்ற முயன்ற டிரைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் தாசில்தார் விஜயா ரெட்டி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது

அதனை 90% தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த தாசில்தாரின் டிரைவர் நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தாசில்தார் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி சுரேஷும் மரணமடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்

விவசாயி சுரேஷுக்கு 60% அளவில் தீக்காயம் இருந்ததாகவும், அவர் குணமாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படு வந்த நிலையில் திடீரென அவரும் இன்று மரணமாகி இருப்பது பெரும் மர்மமாக இருப்பதாக அந்த பகுதியில் உள்ள ஒரு தெரிவித்து வருகின்றனர்

நிலம் பட்டா மாற்றம் விவகாரத்தில் ஒரு சிறிய கருத்து வேறுபாடு காரணமாக தற்போது மூன்று உயிர்கள் பலியாகி இருப்பது தெலுங்கானா மாநிலத்தை உலுக்கி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Exit mobile version