Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு ஒரு இரவில் சரியாக இதை மட்டும் குடிங்க போதும்!!

#image_title

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு ஒரு இரவில் சரியாக இதை மட்டும் குடிங்க போதும்!!

மலச்சிக்கல்:-

நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

*தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை

*மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது

*குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது

*முறையற்ற தூக்கம்

மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய எளிய வழிகள்:-

1.பப்பாளி ஸ்மூத்தி

தேவையான பொருட்கள்:-

*பப்பாளி தூண்டுகள் – தேவையான அளவு

*பால் – 1 டம்ளர்

செய்முறை:-

ஒரு கீத்து பப்பாளியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுத்து விடவும்.

பின்னர் 1 கிளாஸ் பால் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். இதை ஒரு கிளாஸில் ஊற்றி இரவு தூங்கச் செல்வதற்கு முன் பருகவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அதிகாலையில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலமும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

2.எலுமிச்சை சாறு

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

*தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதை இரவு தூங்கச் செல்வதற்கு முன் பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகாலையில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலமும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

3.இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி – சிறு துண்டு

*தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் சிறிதளவு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸ்க்கு வடிகட்டி இரவு தூங்கச் செல்வதற்கு முன் பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகாலையில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலமும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

4.புதினா தேநீர்

தேவையான பொருட்கள்:-

*புதினா இலை – 10

*தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் 10 புதினா இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸ்க்கு வடிகட்டி இரவு தூங்கச் செல்வதற்கு முன் பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகாலையில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலமும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Exit mobile version