Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிறந்த நாளை கொலை நாளாக மாற்றிய நண்பர்கள்! கேக் வெட்டிய தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!!

பிறந்த நாளை கொலை நாளாக மாற்றிய நண்பர்கள்! கேக் வெட்டிய தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!!

 

பிறந்த நாளின் பொழுது கேக் வெட்டிய சமயத்தில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

தற்பொழுது உள்ள காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக கொலைகள் சாதாரணமாக நடக்கின்றது. பிரியாணி தரவில்லை, ஆம்லெட் கிடைக்கவில்லை, நடந்து செல்லும் பொழுது வழி விடவில்லை போன்ற பல்வேறு காரணங்களுக்காக கொலைகள் நடக்கின்றது. அந்த வரிசையில் கேக் வெட்டிய பிரச்சனை காரணமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் அஜய். இவர் தனது பிறந்தநாளுக்கு அவருடயை நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். பிறந்த நாளின் முக்கிய அம்சமான கேக் வெட்டுவது மட்டும் சாலையின் நடுவே வைத்து செய்துள்ளார்.

 

அப்போது சாலையில் வந்த ஆட்டோ ஓட்டுநர் காமேஷ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேட்டுள்ளார். இதையடுத்து வாக்குவாதம் தகராறாக மாறியது. இந்த தகராறில் கோபம் அடைந்த அஜய்யின் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் காமேஷ் அவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

 

கொலை செய்துவிட்டு அஜய்யும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கேக் வெட்டியதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version