Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நரம்பு தளர்ச்சி முதல் பாம்பு கடி வரை.. இந்த கிழங்கின் இலையை அரைத்து பருக பலன் கிடைக்கும்!!

அதிக சுவை நிறைந்த கிழங்கான சேப்பங்கிழங்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் கொண்ட உணவுப் பொருளாகும்.இந்த சேப்பக்கிழங்கை போல் சேப்பங்கிழங்கின் இலையிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

சேப்பங்கிழங்கு இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த இலையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் நலமாக இருக்கும்.சேப்பங்கிழங்கு இலையை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வது கட்டுப்படும்.

கண்பார்வை குறைபாடு,கண் எரிச்சல்,கண் வலி போன்ற பாதிப்புகள் குணமாக சேப்பங்கிழங்கு இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வரலாம்.

உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் இந்த சேப்பங்கிழங்கு இலையை ஜூஸாக அரைத்து பருகலாம்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க சேப்பங்கிழங்கு இலையை அரைத்து குடிக்கலாம்.சேப்பங்கிழங்கு இலையில் உள்ள எத்தனால் என்ற வேதிப்பொருள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்க தினம் ஒரு கிளாஸ் சேப்பங்கிழங்கு ஜூஸ் பருகலாம்.குடல் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீள சேப்பங்கிழங்கு இலையை அரைத்து பருகலாம்.

கண்களில் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நீரிழிவு நோயாளிகள் சேப்பங்கிழங்கு இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் பலன் கிடைக்கும்.

இரத்தசோகை பிரச்சனை இருப்பவர்கள் இந்த இலையை சமைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.நரம்பு தளர்ச்சி பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் இந்த இலையை தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகி வரலாம்.

தேள்,பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் சேப்பங்கிழங்கு இலையை அரைத்து கடிபட்ட இடத்தில் பிழிந்துவிட்டால் விஷம் முறிந்துவிடும்.எனவே அடிக்கடி சேப்பங்கிழங்கு இலையை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Exit mobile version