Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல் வலி அசதி நீங்கி சுறுசுறுப்பாக இருக்க.. இந்த பால் செய்து குடித்து வாருங்கள்!!

உங்களுக்கு அடிக்கடி உடல் வலி,உடல் அசதி பிரச்சனை இருந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்.உடல் மந்த உணர்வு நீங்க வெள்ளை எள்,பாதாம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பானம் தயாரித்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளை எள் – இரண்டு தேக்கரண்டி
2)பாதாம் பருப்பு – 10
3)பசும் பால் – ஒரு கிளாஸ்
4)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

**அடுத்து இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் 10 பாதாம் பருப்பை இதனுடன் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் கொதித்து வந்ததும் ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு அரைத்த வெள்ளை எள் பொடியை அதில் போட்டு நன்றாக கலக்கி குடித்து வந்தால் கை கால் வலி,முதுகு வலி,உடல் சோர்வு நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துண்டுகள் – அரை கப்
2)பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி
3)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
4)ஏலக்காய் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

**முதலில் அரை கப் அளவிற்கு தேங்காய் துண்டுகள் எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அடுத்து பாத்திரம் ஒன்றிற்கு தேங்காய் பாலை வடிகட்டி கொள்ள வேண்டும்.

**அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த தேங்காய் பாலை அதில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

**பிறகு அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு ஏலக்காயை இடித்து தேங்காய் பாலில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

**பிறகு இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடித்தால் உடல் வலி சோர்வு நீங்கும்.

Exit mobile version