பசு மாட்டிற்கு இந்த பொருளை கொடுங்கள்.. எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனையும் நீங்கும்!!

0
152
#image_title

பசு மாட்டிற்கு இந்த பொருளை கொடுங்கள்.. எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனையும் நீங்கும்!!

 

நீங்கள் பல கடன்களை வாங்கி அந்த கடனை திருப்பி அடைக்க முடியாமல் தினமும் கஷ்டபட்டுக் கொண்டு இருப்பவர்கள் பசு மாட்டிற்கு இந்த ஒரு பொருளை மட்டும் கொடுத்தால் கோடிக் கணக்கான கடன் இருந்தாலும் அதை எளிமையாக அடைத்து விடக் கூடிய வழி உங்களுக்கு பிறக்கும். அது என்ன பொருள் எவ்வாறு பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

 

நீங்கள் உங்களது கடன்களை எளிமையாக திருப்பி அடைக்க பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டிய பொருள் பாசிப்பயிறு. இந்த பாசிப் பயிற்றை வந்து நீங்கள் பசு மாட்டிற்கு கொடுக்கும் பொழுது பல கோடி கணக்கான கடன்களை எளிமையாக அடைப்பது மட்டுமில்லாமல் நீங்கள் பல கோடிகளுக்கு சொந்தக்காரராகவும் மாறலாம். இந்த பாசிப்பயிறை எவ்வாறு பசு மாட்டிற்கு கொடுப்பது என்று பார்க்கலாம்.

 

நீங்கள் தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு உங்கள் வீட்டில் இருக்கும் பாசிப்பயிறில் ஒரு கைப்படி அளவு எடுத்து அதை சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை இரண்டில் எதாவது ஒன்றை எடுத்து பாசிப்பயிறுடன் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இது நன்கு ஊறி இருக்கும்.

 

இதை அப்படியே எடுத்துக் கொண்டு உங்கள் கையால் பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும். பிறகு “அம்மா கோமாதா என்னுடைய கடன் எல்லாம் தீர்ந்து போக வேண்டும்” என்று பசுவிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

 

இந்த பாசிப் பயிற்றை தொடர்ந்து எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். எவ்வளவு அதிக அளவு பாசிப் பயிற்றை உங்கள் கைகளால் பசு மாட்டிற்கு நீங்கள் கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு செல்வம் உங்கள் வீட்டில் செழிக்கும். இதனால் உங்களது கடன்கள் அனைத்தும் தீர்ந்து நீங்கள் அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து விடுவீர்கள்.

 

முக்கியமாக இந்த பாசிப் பயிற்றை தானமாக கொடுக்கலாம். புதன் கிழமை அன்று பாசிப் பயிற்றை தானமாகக் கொடுத்தால் உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகும். பாசிப் பயிற்றை கோயில்களில் இருப்பவர்களுக்கும், குருக்கள்களுக்கும், ஆசிரமங்களுக்கும், ஏழைக் குடும்பங்களுக்கும் தானமாக கொடுக்கலாம். நீங்கள் தானமாக கொடுக்கும் அந்த பாசிப்பயிற்றை அவர்கள் சமைத்து சாப்பிடும் பொழுது உங்களது கடன் சுமை குறையத் தொடங்கும்.

 

கடைகளில் வறுத்த பாசிப்பயிறு விற்கப்படும். இந்த பாசிப்பயிற்றை நீங்கள் வாங்கி காகம் மற்றும் குருவிகளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது பாசிப்பயிற்றை பாயாசம் செய்து ஏழைகளுக்கு கொடுக்கலாம்.

 

இவ்வாறு பாசிப்பயிற்றை தானமாகக் கொடுக்கும் பொழுது உங்களது கடன் சிறிது சிறிதாக குறையத் தொடங்கும். உங்களது கடன் அளவு குறைவது மட்டுமில்லாமல் நீங்களும் பணக்காரராக மாறுவீர்கள். உங்கள் வீட்டில் உள்ள பணக் கஷ்டம் குறையத் தொடங்கும். பணக் கஷ்டத்துடன் சேர்ந்து மனக் கஷ்டமும் குறையும்.