தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை:!! சவரனுக்க ரூ.1080 உயர்வு!

0
186

தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை:!! சவரனுக்க ரூ.1080 உயர்வு!

சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றதில் காணப்படுகிறது.

Oct 3 ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது.
Oct 4 ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனையானது. அதவது ஒரு கிராமிருக்கு 70 ரூபாய் உயர்ந்து 4775 ரூபாய்க்கு விற்பனையானது.அக்டோபர் 5 மேலும் தங்கத்தின் விலை 480 ரூபாய் உயர்ந்து ஆபரண தங்கத்தின் விலை 38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அதாவது ஒரு கிராமிருக்கு 60 ரூபாய் உயர்ந்து 4835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் இன்று அக்டோபர் ஆறாம் தேதி மேலும் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.38720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமிற்கு ஐந்து ரூபாய் உயர்ந்து ரூ.4840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை,நீண்ட நாட்களுக்குப் பிறகு 39000 தொடவுள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும் 1080 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளி கிராமம் ஒன்றுக்கு 67 ரூபாய்க்கு விற்பனையானது.இன்று 0.50 காசுகள் சரிந்து 66.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.