Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குட் நியூஸ்! 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவெளைகள் குறைப்பு! பள்ளிக் கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

குட் நியூஸ்! 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவெளைகள் குறைப்பு! பள்ளிக் கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற 2021-22-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு கடந்த மே மாத  முடிவுற்றது.

தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு  பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளனது.

அதன்படி, 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக அமைய தற்போது பாடவெளை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

Exit mobile version