லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு!

0
102
Government permission to write! Notice that the corona is healed!

லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு!

கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் அதிக அளவு பாதிப்புகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.இதற்கு மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது தடுப்பூசிக்கு அனுமதியும், முழு ஊரடங்கும் அமல் படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நெல்லூர் மாவட்டத்தில், கிருஷ்ணபட்டினம் முத்துகூறு கிராமத்தை சேர்ந்தவர், போகினி ஆனந்தையா என்பவர், பல ஆண்டுகளாக மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.

தற்போது இவர் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறையில் மருந்து ஒன்றை தயாரித்தார்.அது கோரோனாவிற்க்கு நல்ல தீர்வாக இருந்ததால் மக்கள் இவரை தேடி படையெடுத்து வந்தனர்.

இதனை அறிந்த ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் மருந்தை ஆராய்ச்சி செய்யவும், மக்களுக்கு தர கூடாது எனவும் ஆணை பிறப்பித்தார்.அதன்படி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் அங்குள்ள ஆயூர்வேத மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்து, தற்போது லேகியதிற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.

அதன் காரணமாக ஆந்திர அரசும் அதை அனுமதி அளித்துவிட்டது.ஆனால் சொட்டு மருந்துக்கு தடை விதித்து உள்ளது.மேலும் இந்த மருந்தில் தேன், வால் மிளகு, மற்றும் ஒரு வகையான கத்தரிக்காயின் கூழ் போன்றவை சேர்ந்து முழுக்க ஆயிர்வேத முறையில் தயாரிக்கப்பட்டது என அதிகாரபூர்வ அறிவிப்பு தந்துள்ளது.

இந்த மருந்து கள்ள சந்தையில்,ஒரு பாக்கெட்டின் விலை, ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்கப்படுகிறது எனவும் தெரிகிறது.இந்த மருந்துக்கு எதுவும் பக்கவிளைவுகள் இல்லை என்றும், ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆர் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.