Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒருவழியாக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!

#image_title

ஒருவழியாக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!

வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது, எனவே பொன்முடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் அளிக்கப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

எனவே,பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆனார், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பொன்முடி தொடர்பான வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு அவரை இன்னும் உச்சநீதிமன்றம் விடுவிக்கவில்லை எனவே பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அனுப்பிருந்தார்.

ஆளுநரின் பதில் கடிதத்திற்கு எதிராக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக ஆளுநர் நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் இல்லையேல் நாங்களே முடிவேடுப்போம் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

எனவே,பதவி பிரமாணத்திற்க்கு அழைப்பு விடுத்து இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அமைச்சர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ஆர.என்.ரவி.

Exit mobile version