கீழ்கண்ட பாட்டி வைத்தியங்கள் செய்து நம் உடல் நல பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ளாலாம்.
**துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சளி தொந்தரவு நீங்கும்.ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து குடித்தால் சளி தொந்தரவு அகலும்.
**வறட்டு இருமல் குணமாக தேனை குழைத்து சாப்பிடலாம்.ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
**துளசி சூரணம்,மிளகு,சுக்கு போன்றவற்றை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் காய்ச்சல் பாதிப்பு குணமாகும்.
**வயிறு வலி குணமாக ஓமத்தை பொடித்து பாலில் கலந்து பருகி வரலாம்.விளக்கெண்ணெயை தொப்புள் மீது ஊற்றி தடவினால் வயிறு வலி குணமாகும்.
**வாழைப்பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
**வெள்ளரி விதைகளை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.
**குடற் புழுக்கள் வெளியேற வேப்பம் பழத்தை தினமும் இரண்டு என்ற எண்ணிக்கையில் சாப்பிடலாம்.
**தூதுவளை இலையை அரைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
**மிளகை பொடித்து ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் தொண்டை கட்டு குணமாகும்.
**மருதாணி இலையை அரைத்து கால் விரல்களில் பூசி வந்தால் நகசுத்தி,நகம் சொத்தையாவது தடுக்கப்படும்.
**சுக்கை இடித்து நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.
**கீழாநெல்லி இலையை அரைத்து கொட்டை பாக்கு வடிவில் எடுத்துக் கொண்டால் காமாலை குணமாகும்.
**பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் கல்லீரல் கோளாறு நீங்கும்.
**வாழைப்பழத்தை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீர்ணக் கோளாறு பிரச்சனை சரியாகும்.
**பிரண்டை இலையை உலர்த்தி பொடியாக்கி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் வலிமையாகும்.
**உளுந்து பருப்பை பொடித்து கஞ்சி செய்து பருகி வந்தால் இடுப்பு எலும்பு வலிமை அதிகரிக்கும்.
**பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.