மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

0
71
#image_title

மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட கடிமனாக இருக்கும்.

மூட்டு வலி வரக் காரணங்கள்:-

*ஆரோக்கியமற்ற உணவு

*ஜவ்வு தேய்மானம் ஆகுதல்

*எலும்பு தேய்மானம் ஆகுதல்

*வயது மூப்பு

*வேலை பளு

*உடல் பருமன்

இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வேப்ப எண்ணெய்

*கிச்சிலி கிழங்கு

செய்முறை:-

முதலில் 1/2 லிட்டர் வேப்ப எண்ணெயை ஒரு சுத்தமான இரும்பு கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளவும். வேப்ப எண்ணெய்யில் ஒரு வித வாசனை வரும். அவை குமட்டலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதனை சரி செய்யவும், வேப்ப எண்ணெய் போல் மூட்டு வலிக்கு சிறந்த தீர்வாக இருக்கும் மற்றொரு பொருளான கிச்சிலி கிழங்கு 8 முதல் 10 எடுத்து உரலில் போட்டு தட்டி கொள்ளவும்.

பின்னர் தட்டி வைத்துள்ள கிச்சிலி கிழங்கை சூடாகி கொண்டிருக்கும் வேப்ப எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் நன்கு காய்ந்து கெட்டி பதத்திற்கு வரும் வரை விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து இந்த வேப்ப எண்ணெய் தைலத்தை நன்கு ஆறவிட்டு ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

இரவு தூங்குவதற்கு முன் முழங்கால் மூட்டுகளின் மேல் இந்த தைலத்தை போட்டு நன்கு மஜாஜ் செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி உடனடியாக குணமாகி விடும்.