21 நாட்களில் அசுர வேகத்தில் முடி வளரும்!! நம்ப முடியவில்லையா? பயன்படுத்தி பாருங்கள்!!

0
88

21 நாட்களில் அசுர வேகத்தில் முடி வளரும்!! நம்ப முடியவில்லையா? பயன்படுத்தி பாருங்கள்!!

இக்காலகட்டத்தில் முடி உதிர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகள் அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு முடி அடர்த்தி குறைந்தும், ஆண்களுக்கு வழுக்கை போன்றவைகள் ஏற்படுகிறது. இவைகளை உடனடியாக கவனிக்க வேண்டும் ஏனென்றால் சில சமயங்களில் உடலிலுள்ள பிரச்சனை காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது.

தினமும் 50 முதல் 60 வரை முடிவுகள் கொட்டுவது இயல்பான ஒன்றாகும். முடி வளர்ந்து தானாக உதிர்வது இயல்பான ஒன்றாகும்.

ஒரு நாளுக்கு நூறுக்கும் மேல் முடி உதிர்வு ஏற்பட்டால் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

முடிகள் நம் ஊட்டச்சத்து நிறைந்த உணவு ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் வேகமாக அடர்த்தியாகவும் முடி வளர்கிறது.கருஞ்சீரகம் நம் தலையில் வழுக்கை விழும் வாய்ப்பை தடுக்கின்றது.

தலைமுடி உதிர்வதை தடுக்கின்றது.

நரைமுடி வருவதை குணப்படுத்துகிறது.

வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர உதவி செய்கின்றது.

வெந்தயத்தின் நன்மைகள்

வெந்தயத்தில் ஸவைட்டமின் சி, பொட்டாசியம், அயர்ன், புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளது.

வெந்தயம் நமக்கு இளநரை ஏற்படுவதை தடுக்கின்றது.

தேவைபடும் பொருட்கள்

கருஞ்சீரகம்

வெந்தயம்

தேங்காய் எண்ணெய்

செய்முறை.

முதலில் கருஞ்சீரகம் இரண்டரை ஸ்பூன் எடுத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வெந்தயம் இரண்டரை ஸ்பூன் எடுத்து மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து கருஞ்சீரக பொடியையும் வெந்தய பொடியையும் நன்கு கலந்து கொண்டு எடுத்துக் கொள்ளவும்.

கடைசியாக இதில் 200 மிலி தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளவும். அடுத்து இந்த எண்ணெயை சூடு செய்ய வேண்டும்.

அதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது கலந்து வைத்துள்ள எண்ணெய் பாத்திரத்தை இந்த தண்ணீரில்  வைக்க வேண்டும்.

இதனை காலையில் எழுந்து தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து பிறகு தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும். இதனை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் போதும் முடி கருமையாக காடு போல வேகமாக வளரும்.