Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 ஆம் வகுப்பு படிச்சிருக்கீங்களா? உங்களுக்காக ரூ.29000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வெய்டிங்!!

10 ஆம் வகுப்பு படிச்சிருக்கீங்களா? உங்களுக்காக ரூ.29000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வெய்டிங்!!

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோவையில் வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு (ICFRE – Institute of Forest Geneitcs and Tree Breeding)
நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.

நிறுவனம்: கோவை வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு

1.பணி: மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப்

ஆட்கள்:இப்பணிக்கு 3 ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.18,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய கட்டணம் கிடையாது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரை தளர்வு அளிக்கப்படும்.30-09-2023 என்ற தேதியின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பானது கணக்கீடு செய்யப்படும்.

2.பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

ஆட்கள்:இப்பணிக்கு 3 ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிஎஸ்சி,டிப்ளமோ பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு முடித்திருக்க வேண்டும்.இல்லாவிட்டால் பிஎஸ்சி தாவரவியல் படிப்பை முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்: ரூ.ரூ.29,200/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய ரூ.1,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எஸ்சி,இஎஸ்எம் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.750 கட்டணமாக வசூலிக்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.எஸ்சி பிரிவினருக்கு 5 வயது வரை தளர்வு அளிக்கப்படும்.30-09-2023 என்ற தேதியின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பானது கணக்கீடு செய்யப்படும்.

மேலும் (பீல்ட்/லேப்) பணிக்கு ஒருவர்,மெயின்டனன்ஸ் பணிக்கு 2 பேர் என்று மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடைசி தேதி: தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணிக்கு தேர்வு ஆவார்கள்.

Exit mobile version