மதுரை மாநகராட்சிக்கு கல்தா கொடுத்த முன்னாள் எம்பி! அதிரடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம்!

0
113

அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் பதவி காலம் முடிவுற்ற பின்னர் அரசுக்கு சொந்தமான இடங்களை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி இருக்கின்றது.

மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற நபர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதிமுகவை சேர்ந்த நான் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கின்றார். அதோடு தல்லாகுளம் அழகர் கோவில் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் என்னுடைய சொந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது என்று சொல்லி இருக்கின்றார்.

சென்ற மார்ச் மாதம் 19ஆம் தேதி மதுரை வடக்கு தொகுதியில் பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியர் என்னுடைய அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டார். அதனை அடுத்து எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் என்னுடைய அலுவலகத்திற்கு மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பெயரில் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கையை சட்டவிரோதமாக இருக்கிறது. என்னுடைய அலுவலகத்திற்கு வைத்த சீலை உடைத்து மறுபடியும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜராகி வாதாடினார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் கோபாலகிருஷ்ணனின் அலுவலகப் பணிக்காக மாநகராட்சி சார்பாக இடம் கொடுக்கப்பட்டது. அவருடைய பதவிக்காலம் முடிவுக்கு வந்தவுடன் அந்த இடம் அவருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதற்கு வாடகை பாக்கியும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி மனுதாரர் தற்சமயம் எந்த ஒரு பதவியிலும் இல்லை பதவிக்காலம் முடிவடைந்த உடன் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து காலி செய்து இருக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.

ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இதைப் போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்? இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல். உடனடியாக மாநகராட்சி கட்டிடத்தை காலி செய்து மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் வாடகை பாக்கி இருக்கும் ஆனால் அதிகாரிகள் அதனை விரைந்து வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து இருக்கிறார்.