ஆண்,பெண் தங்கள் இளமை பொலிவை அதிகரிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு குறிப்பை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)கடுக்காய் – ஒன்று
3)தான்றிக்காய் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
பெரிய நெல்லிக்காய்,கடுக்காய் அல்லது தான்றிக்காய் ஆகிய மூன்றையும் நன்றாக உலர வைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இது திரிபலா பொடியாக நாட்டு மருந்து கடையில் கிடைக்கிறது.இந்த திரிபலா பொடி 100 கிராம் அளவிற்கு வாங்கி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி திரிபலா பொடி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் சருமம் இளமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி பெரிய நெல்லிக்காய் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நெல்லிக்காய் பேஸ்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இளமை பொலிவு அதிகரிக்கும்.
1)தேங்காய் பால் – ஒரு கிளாஸ்
2)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி பாதாம் பிசினை அதில் போட்டு நன்றாக ஊறவைக்க வேண்டும்.இந்த தேங்காய் பாலை தினமும் குடித்து வந்தால் இளமை அதிகரிக்கும்.