Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புண், காயம் ஆற 3 சிம்பிள் வழிகள் இதோ!

#image_title

புண், காயம் ஆற 3 சிம்பிள் வழிகள் இதோ!

உடலில் அடிபட்ட இடத்தில் புண், காயங்கள், இரத்த கசிவு ஆகியவை ஏற்படுவது சாதாரணம் தான். இருந்தாலும் இதை உரிய நேரத்தில் குணமாக்கி கொள்ள வில்லை என்றால் பின்னாளில் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. இதை விரைவில் குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை முயற்சித்து பார்க்கவும்.

தீர்வு 01:-

தேவையான பொருட்கள்:-

*வெங்காயம்

*தேங்காய் எண்ணெய்

செய்முறை…

முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 5 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றி இடித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து காய்ச்சிக் கொள்ளவும்.

இதை ஆறவிட்டு உடலில் காயங்கள், புண்கள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அவை உடனடியாக குணமாகும்.

தீர்வு 02:-

தேவையான பொருட்கள்:-

*விரலி மஞ்சள்

*தேங்காய் எண்ணெய்

செய்முறை…

1 துண்டு விரலி மஞ்சளை இடித்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து குழைத்து உடலில் காயங்கள், புண்கள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அவை உடனடியாக குணமாகும்.

தீர்வு 03:-

தேவையான பொருட்கள்:-

*மூக்குத்தி பூ செடி இலை – சிறிதளவு

செய்முறை…

மூக்குத்தி பூ செடியின் இலை சிறிதளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து உடலில் காயங்கள், புண்கள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அவை உடனடியாக குணமாகும்.

Exit mobile version