Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக இதை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக இதை சாப்பிட்டால் போதும்!

இன்றைய காலகட்டத்தில் 40 வயதுகளை தாண்டினாலே சர்க்கரை நோயின் பயம் அனைவரையும் ஆட்கொள்கிறது. ஆங்கில மருந்துகளால் இதனை குணப்படுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சர்க்கரையின் அளவை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

1. வெந்தயம் ஒரு ஸ்பூன்

2. கருஞ் சீரகம் ஒரு ஸ்பூன்

3. மிளகு ஒரு ஸ்பூன்

4. மஞ்சள் ஒரு ஸ்பூன்

5. திரிபலா சூரணம் 4 ஸ்பூன்

செய்முறை:

1. கருஞ்சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றை வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளலாம் அல்லது  சட்டியில் போட்டு சிறிது சூடாக்கி எடுத்துக்கொள்ளலாம்.

2. இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

3. இதனுடன் மஞ்சள் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

4. இந்த கலவையுடன் 4 ஸ்பூன் திரிபலா சூரணத்தை கலந்து கொள்ளவும்.இதனை நீங்கள் கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். 3 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

இதை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மிதமான சூடான நீரில் அல்லது மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

அல்லது சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம். அதேபோல் மாலையிலும் குடிக்கலாம்.

காலையிலும் மாலையிலும் 5 கிராம் வீதத்தில் குடிக்கலாம்.

சராசரியாக 15 நாட்களுக்கு இந்த முறையை பயன்படுத்தி குடித்துவந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.

Exit mobile version