நடிகர் சந்தானம் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆவார். இவரின் எதார்த்த நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவர் வெளிப்படுத்தும் FACE EXPRESSIONS திரைப்படங்கள் இவருக்கு பாராட்டுக்களை குவித்த வண்ணம் இருந்தது.
அதையடுத்து இவர், இனி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் நடித்தால் ஹீரோ கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்றும் கூறிவிட்டார். பின்னர் ஹீரோவாகவே திரைப்படங்கள் நடிக்கத் தொடங்கினார்.
தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2, சக்க போடு போடு ராஜா போன்ற திரைப்படங்கள் இவர் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் ஆகும். இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வசூலை ஈட்ட வில்லை என்றாலும் அவர் கதாநாயகனாக நடிக்கும் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.