Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அக்குளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி?

#image_title

அக்குளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி?

இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு உடல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக அக்குள் வியர்வை துர்நாற்றம் இருக்கிறது. இதனால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. தினமும் 2 முறை குளித்தாலும் அக்குள் துர்நாற்றம் நம்மை விட்டு நீங்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் அதிகப்படியான கெட்ட பாக்டீரியாக்கள் அக்குள் பகுதிக்குள் சேர்வது தான். இவற்றை வீட்டு உள்ள பொருட்களை வைத்து எளிதில் சரி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை – 1

*கடலை மாவு – 1/4 தேக்கரண்டி

*தூள் உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:-

முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக அறிந்து ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு அவற்றில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு தேய்த்து கொள்ளவும். அடுத்து 1/4 தேக்கரண்டி கடலை மாவை எலுமிச்சையில் சேர்த்து மீண்டும் தேய்த்து கொள்ளவும்.

பிறகு இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து அக்குள் பகுதியில் நன்றாக தேய்க்கவும்.
இவ்வாறு 5 நிமிடங்கள் வரை தேய்க்கவும். பிறகு அக்குளை தேய்த்து குளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் அக்குள் பகுதியில் உருவாகும் கெட்ட பாக்டீரியாக்கள் அளிக்கப்பட்டு துர்நாற்றம் ஏற்படுவது அடியோடு நீங்கும்.

Exit mobile version