பெண்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!! ஆண்களே அது மட்டும் உஷார்..!!

0
681

பெண்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!! ஆண்களே அதுமட்டும் உஷார்..!!

how to satisfied life partner in tamil: ஒருவரின் எண்ணங்களையும் அவர்களின் விருப்பத்தையும் எதிர்ப்பார்ப்பு என்கிற ஒற்றை விசயத்தில் புரிந்து கொள்ளலாம். ஆண்,பெண் அனைவருக்குமே தேவையும்,எதிர்ப்பார்ப்பும் இருப்பது இயல்பான ஒன்றாகும். இயற்கையில் ஒரு கணவனிடம் மனைவியின் எதிர்ப்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.

உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் அறுபது சதவீத ஆண்களும் நாற்பது சதவீத பெண்களும் வேறொரு நபர்களுடன் தவறான தொடர்பை வைத்துக் கொள்ள விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு 2004 ல் எடுக்கப்பட்டதாகும். கடந்த காலத்தில் ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்யலாம் என்கிற முறை இருந்தது. காலப்போக்கில் ஒருவருக்கு ஒருத்தியாக மாற்றம் அடைந்தது.

தற்போதைய சூழலில் மனைவி தன் கணவனிடம் எதிர்ப்பார்ப்பது அன்பு மட்டுல்லாது “உச்சகட்ட இன்பத்தையும்” எதிர்பார்க்கிறார்கள்.மனைவியின் விருப்பத்தை 100% நிறைவேற்ற முடியாவிட்டாலும் அவர்களுக்காக போதிய நேரத்தை ஒதுக்குவதும், அன்பாக பேசுவதும் சில நேரத்தில் கள்ளத்தனமாக பேசுவதையும் கேட்பதற்கு ஆவலாக உள்ளார்கள். இந்த ஆவலை எல்லா கணவனும் தீர்த்து வைப்பதில்லை.

கணவனிடம் தனக்கான “திருப்தி” கிடைக்காத போது அந்த ஏமாற்றத்தை நீண்ட நாட்களுக்கு கடத்த முடியாமல் வேறொரு இடத்தில் தன் தேவையை பூர்த்தி செய்யும் மனநிலை கடந்து சில பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். இந்த கள்ள உறவிற்கு அடித்தளம் அமைத்து கொடுப்பது காம சூத்திரத்தை அறியாத சில கணவன்களேயாவர்.

இந்த குறுக்கு வழியில் பல ஆண்களும், பெண்களும் உல்லாசம் அனுபவிப்பது கலியுகத்தில் கணக்கில்லாமல் போய்விட்டது. என் தேவையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் தான் விரும்பும் நபருடன் உறவு வைத்துக் கொள்வதை சொந்த உரிமையாக மாற்றிக் கொள்கிறார்கள்.

“திருட்டு மாங்காய் ருசி அதிகம்” என்பது போல் இருபாலரும் கள்ளக் காதலில் ஊறித் திளைப்பதற்கு எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய சட்டமும் கள்ளக் காதலுக்கு பச்சை கொடி காட்டி இருப்பதும் கவனிக்க வேண்டியது. திருமணத்திற்கு முன்பு தனக்கான கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண்கள் மனதில் கோட்டை கட்டி வைப்பார்கள் அந்த கோட்டை இடிந்து தரைமட்டமாகும் போது அவர்களுக்கு பிடித்த ஆண்களுடன் உறவினை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

தனக்கான பாதுகாப்பும், அக்கறையும் வேறொரு நபரிடம் இருந்து கிடைக்கும் போது அது கள்ளக் காதலாக மாறுகிறது. தனது உணர்வுகளை புரிந்து கொள்ளாத போது வெறுப்பினை சந்திக்கிறார்கள். அவர்களின் உணர்வுக்கு எந்த ஆண் மதிப்பு தருகிறானோ அங்கே நட்பாகி, காதலாகி கடைசியில் கள்ளக்காதலில் அடைக்கலமாகிறார்கள்.

பொதுவாகவே பெண்கள் உடல் ரீதியாகவும் மனதின் ரீதியாகவும் பிரச்சினையை எதிர் கொள்பவர்கள். அவர்களின் உணர்வை மதித்து எதிர்ப்பார்ப்பினை புரிந்து செயல்படும் ஆண் வாழ்க்கையில் முழு இன்பத்தோடு வெற்றியடைகிறான்.