Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

7 குழந்தைகள் பெற்றால் 1 கோடி ரூபாய் பரிசு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

#image_title

7 குழந்தைகள் பெற்றால் 1 கோடி ரூபாய் பரிசு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!
தம்பதிகள் 7 குழந்தைகள் பெற்றால் அவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 1200000 ரூபாய் வழங்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகையை அதிகரிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரானா பாதிப்பால் அங்கு மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. இந்த பாதிப்பு சீனா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. சீனாவில் மக்கள் தொகை குறைந்ததை அடுத்து சீனா அரசு மக்கள் தொகையை அதிகரிக்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனா அரசு குறைந்து வரும் மக்கள் தொகையை அதிகரிக்க “நியூ இரா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 7 குழந்தைகள் பெற்றால் சமூக ஆதரவாக 150000 டாலர் வழங்கப்படவுள்ளதாம். இதை சீனாவில் முதலில் 20 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் காதல் விடுமுறை, திருமண உதவித் தொகை, மூன்றாவது குழந்தை பிறந்தால் ஊக்கத் தொகை போன்ற பல திட்டங்களை சீனாவின் குடும்ப கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.
Exit mobile version