Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!!

#image_title

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!!

நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை நம் வீட்டிற்கு வரவழைக்க சில பரிகாரங்களை செய்ய வேண்டும். இதனால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்.

குலதெய்வம் வீட்டிற்கு குடியேற இந்த பரிகாரத்தை செய்யுங்கள்…

முதலில் பச்சரிசியை மாவாக அரைத்து ஒரு சிறிய தட்டில் பரப்பி கொள்ளவும். இதை பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன் வைக்கவும். அதன் மீது காமாட்சி விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும். பின்னர் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை பச்சரிசி மாவில் கோலம் போடுவது போல் எழுதவும்.

ஒருவேளை உங்கள் குலதெய்வம் அய்யனாராக இருந்தால் ‘ஓம் அய்யனாரே துணை’ என்று எழுதவும். உங்களுடைய குலதெய்வம் பெருமாளாக இருந்தால் ‘பெருமாள் துணை’ என்று எழுதவும். பின்னர் குலதெய்வ திருவுருவப் படத்திற்கு தீப ஆராதனை காட்டி குலதெய்வம் வீட்டிற்கு வர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். பழைய பச்சரிசி மாவை பூஜை கால் படாத இடத்தில் ஈ எறும்புகளுக்கு சாப்பிட போட்டுவிடவும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்து வர குலதெய்வம் மனமுருகி உங்கள் வீட்டில் தங்கும்.

Exit mobile version