காய்ச்சிய பாலில் இந்த பொடி சேர்த்து பருகினால் 100% குழந்தை பாக்கியம் கிடைக்கும்!!

0
256
If you add this powder to boiled milk and drink it, you will get 100% baby blessing!!

காய்ச்சிய பாலில் இந்த பொடி சேர்த்து பருகினால் 100% குழந்தை பாக்கியம் கிடைக்கும்!!

குழந்தை பிறப்பு விகிதம் நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் நீங்கள் உண்ணும் ஆரோக்கியம் இல்லாத உணவுகள் தான்.

ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு மற்றும் பெண்களுக்கு கருப்பையில் பிரச்சனை ஏற்படுவதால் அவர்களால் எளிதில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவதில்லை.முறையாக உடலுறவு கொண்டாலும் குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்படுகிறது என்பவர்களுக்கு தான் இந்த இயற்கை வைத்தியம்.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்,சத்து குறைபாடு,மன அழுத்தம்,உடல் பருமன்,தைராய்டு,நீர்க்கட்டி போன்ற பல்வேறு சூழ்நிலைகளால் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று கருதும் தம்பதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி வரலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு திராட்சை விதை
2)பூனைக்காலி விதை
3)அரச விதை
4)முருங்கை விதை
5)ஜாதிக்காய்
6)தாமரை விதை
7)அத்தி விதை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் 100 கிராம் அளவு நாட்டு மருந்து கடையில் வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

இந்த ஏழு விதைகளையும் வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.

இதை ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.இந்த அளவில் அரைத்தால் ஒரு மாதத்திற்கு பயன்படுத்த முடியும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.ஒரு கொதி வரும் வரை காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கலக்கி இரவு நேரத்தில் உணவு உட்கொண்ட பின்னர் குடிக்கவும்.தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.