Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளி என்று இந்த சிலைகளை வாங்கி வைத்தால் கோடிஸ்வரர் யோகம் கிடைக்கும்!!

If you buy these idols on Diwali, you will get Kotiswarar Yoga!!

If you buy these idols on Diwali, you will get Kotiswarar Yoga!!

நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பண்டிகையான தீபாவளி வருகின்ற அக்டோபர் 31 அன்று வரவிருக்கிறது.மக்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இந்த தீபாவளி பண்டிகைக்கு முந்தின நாள் வீட்டில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்வார்கள்.வீட்டில் ஏதேனும் உடைந்து பொருட்கள் இருந்தாலோ நீண்ட வருடங்களாக பயன்படுத்தாத பொருட்கள் இருந்தாலோ அதை இந்நாளில் அப்புறப்படுத்திவிட வேண்டும்.இந்நாளில் தங்கம்,வெள்ளி போன்ற ஆபரணங்களை சிலர் வாங்குவார்கள்.சிலர் வீட்டிற்க்கு தேவையான ஏதேனும் ஒரு பொருளை வாங்கி வைப்பார்கள்.

இப்படி வாங்கக் கூடிய பொருட்கள் வீட்டிற்குள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க கூடியதாக இருந்தால் இன்னும் சிறப்பு.சிலவகை பொருட்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிப்பதோடு லட்சமி தேவியின் அருள் கிடைக்கவும் வழிவகை செய்கிறது.

அந்தவகையில் யானை சிலை,ஆந்தை சிலை,காமதேனு சிலை,ஆமை சிலை,பிரமிட் சிலை போன்றவற்றை வாங்கி வைத்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.இந்த சிலைகள் செம்பு,பித்தளை அல்லது வெள்ளியில் இருந்தால் இன்னும் சிறப்பு.

இந்த சிலைகளை வீட்டில் வைத்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதோடு லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.நீங்கள் நிதி நெருக்கடியில் இருந்தால் அதில் இருந்து மீண்டு முன்னேற்றத்தை காண்பீர்கள்.இந்த சிலைகளை வாட்டில் வைத்திருப்பது மங்களகரமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.இந்த சிலைகள் வீட்டில் இருந்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது.எனவே இந்த தீபாவளி நாளில் இவ்வகை சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து கோடீஸ்வரர் யோகத்தை பெறுங்கள்.

Exit mobile version