Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!!

#image_title

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!!

இன்று பெரும்பாலானோர் உடல் பருமனால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு முறை பழக்கம் மற்றும் சோம்பேறி தனமான வாழ்க்கை முறை.

இதனால் வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பு சேர்ந்து விடுகிறது.வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கொழுப்புகள் கரைய பட்டை தேநீர் அருந்துவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)இலவங்கப்பட்டை
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை:-

ஒரு துண்டு பட்டையை லேசாக வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பின்னர் அரைத்த இலவங்கப்பட்டை பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் கலந்து குடிக்கவும்.தேயிலை டீ,காபிக்கு பதில் இந்த பட்டை தேநீர் குடித்து வந்தால் வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)பட்டை
2)இலவங்கம்
3)தேன்

செய்முறை:-

ஒரு உரல் அல்லது மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு பட்டை,4 இலவங்கம் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அரைத்த பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு சில நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளவும்.

இதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை,மாலை என இருவேளையும் குடித்து வந்தால் வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.

Exit mobile version