இமையலமையில் மட்டுமே விளையும் இந்த உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆயுள் கூடுமாம்!!
உணவின் சுவையை கூட்டுவதில் உப்பிற்கு அதிக பங்கு இருக்கிறது.ஆனால் உப்பை அதிகளவு பயன்படுத்தி வந்தால் உடலில் பலவித நோய் பாதிப்புகள் ஏற்படும். தைராய்டு,இரத்த கொதிப்பு,பிபி,சர்க்கரை,மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
எனவே ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் இந்துப்பை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இந்துப்பில் அயோடின்,சோடியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,துத்தநாகம்,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியிருக்கிறது.சாதாரண கல் உப்பை போல் இந்த இந்துப்பை கடல் நீரில் இருந்து எடுக்கப்படுவதில்லை.இவை இமையமலை பகுதியில் உள்ள பாறைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
இந்துப்பை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலிலுள்ள சூடு குறையும் என்று ஆய்வு முடிவுகள் சொல்கிறது.பசியின்மையால் அவதிப்படுபவர்கள் உணவில் இந்துப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாய்துர்நாற்றம்,சொத்தைப்பல்,ஈறு வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் வெந்நீரில் சிறிது இந்துப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வர வேண்டும்.
தோல் சார்ந்த பிரச்சனை குணமாக குளிக்கும் நீரில் சிறிது இந்துப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.தினமும் ஒரு கிளாஸ் இந்துப்பு கலந்த வெந்நீர் அருந்தி வந்தால் உடல் எடை கட்டுக்குள் வரும்.
இதயம் தொடர்பான பாதிப்புகள் குணமாக உணவில் இந்துப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.நெஞ்சில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் அதை சரி செய்ய இந்துப்பு கலந்த நீர் அருந்த வேண்டும்.
இந்துப்பு சேர்க்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும்.கண் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க தினமும் இந்துப்பு நீர் அருந்தி வந்தால் தீர்வு கிடைக்கும்.