வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!!

0
132
If you put incense in this herb sambrani which will increase the divine power at home!!

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!!

தூப தீபம் போட கடையில் சாம்பிராணி வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் தயாரித்து தூபம் போடுங்கள்.இதனால் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெண் கடுகு
2)அருகம்புல் பொடி
3)வில்வ பொடி
4)பால் சாம்பிராணி
5)தேவதாரு தூள்
6)மருதாணி விதை
7)வேம்பு பொடி

இவை அனைத்தும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும். ஒரு பொருளை 50 கிராமுக்கு வாங்குகிறீர்கள் என்றால் இதர பொருட்களையும் அதே அளவில் வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

முதலில் வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு ஈரமில்லாத மற்றும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

இந்த டப்பாவை வீட்டு பூஜை அறையில் வைத்து விடவும். தினமும் காலையில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.அப்பொழுது தயாரித்து வைத்துள்ள சாம்பிராணி பொடியை வைத்து தூபம் போட்டு வீடு முழுக்க காட்டவும். இவ்வாறு செய்வதினால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

வீட்டில் தெய்வ சக்தி அதிகரித்து வாழ்வில் முன்னேறுவதற்கான வழி பிறக்கும்.