Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..!

#image_title

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..!

காசு இல்லாத வாழ்க்கையை இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினம். பிறப்பு, இறப்பு, நல்லது, கெட்டது என்று அனைத்திற்கும் காசு முக்கியமாகி விட்டது. பணம் இல்லை என்றால் நாய் கூட நம்மை மதிக்காது என்பதை சிலர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

பணத்தை வைத்து எடை போடும் காலம் இது… உங்களிடம் பணம் இருந்தால் சொந்தம் உங்களை தேடி வரும்… அதுவே உங்களிடம் பணம் இல்லையென்றால்.. இருக்கும் சொந்தம் எல்லாம் ஓடி விடும்….

இவ்வாறு நம் வாழ்வில் விளையாடுகிறது… இந்த பணத்தை சம்பாதிக்க தான் பலரும் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் விலைவாசி உயர்வால் உழைக்கும் பணம் அனைத்தும் விரைவில் கரைந்து விடுகிறது.

நாம் சம்பதிக்கும் பணம் வீண் விரையம் ஆகாமல்.. அதன் வரவு அதிகரிக்க பண வசியப்பொடி தயாரித்து தூபம் போடவும்.

தேவையான பொருட்கள்:-

*ஜவ்வாது
*அரசப்பட்டை
*ஆலப்பட்டை
*வெள்ளருக்கு
*நவதானியம்
*சிவப்பு குன்றின் மணி
*வெண் குங்கிலியம்
*கருங்குங்கிலியம்
*மருதாணி
*வில்வம்
*ஏலக்காய்
*ரோஜா இதழ்
*கரு மஞ்சள்
*சிறியா நங்கை

மேலே குறிப்பிட்டுள்ள இந்த 18 மூலிகை பொருட்களையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இதை அனைத்தையும் நன்கு அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதை ஈரமில்லாத, காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வீட்டு பூஜை அறையில் வைத்து விடவும்.

வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் போது.. தயாரித்து வைத்துள்ள பண வசியப் பொடி சிறிதளவு அதில் போட்டு வீடு முழுக்க தூபம் போடவும். இவ்வாறு செய்து வந்தால் பண விரையம் நீங்கி பண வரவு அதிகரிக்கும்.

Exit mobile version