Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்!

#image_title

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்!

கூந்தல் அடர்த்தி குறைவாக இருக்கிறது என்று வருந்தும் பெண்கள் ஏராளம். தலைமுடி வளர்ச்சிக்கு செய்ய வைத்தியமே இல்லை என்று வருந்தும் பெண்களுக்கு முறையான தீர்வு என்னவென்று தெரிவதில்லை.

தலைக்கு ஒரு பொருளை பயன்படுத்தும் போது அவை பாதுகாப்பானதா? பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? என்று யோசிக்காமல் கண்ணை மூடிக் கொண்டு கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவத்தினால் முடி உதிர்தல் பாதிப்பு இன்னும் அதிகமாகத் தான் செய்யும்.

முடி வளர்ச்சிக்கு உகந்த எண்ணெய்…

தேவையான பொருட்கள்…

அதிமதுரம்
வெட்டி வேர்
நெல்லிக்காய்
தேங்காய் எண்ணெய்
செம்பருத்தி இலை

எண்ணெய் தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி.. அவை சூடானதும் ஒரு கைப்பிடி அளவு நெல்லிக்காய் துண்டுகள், 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை, 1 கைப்பிடி அளவு வெட்டி வேர் மற்றும் அதிமதுர வேர் சேர்த்து காய்ச்சவும்.

எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்த பின்னர் அடுப்பை அணைத்து ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றவும்.

இந்த எண்ணெயை தலை முடிகளின் வேர் பகுதியில் படும்படி தேய்த்து வந்தால் முடி உதிர்தல், முடி வெடிப்பு, முடி வறட்சி, பொடுகு, இளநரை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Exit mobile version