Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த டிகிரி படித்தால் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை பெறலாம்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடைகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆண்டுதோறும் பட்டப்படிப்புக்கான எம். ஏ தமிழ், எம்.ஃபில் தமிழ், ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (5yr. Integ. P.G Tamil) ஆகிய பட்டப் படிப்புகளுக்கான உப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த 2020-2021ஆம் வருட கல்வியாண்டில் இந்த பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை எனது விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஆய்வியல் தமிழ் பட்டப்படிப்பு(M.Phil) – 4,600 ரூபாய், ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு (Integ. PG Tamil) – 2,400 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. முதுகலை படிப்புக்கு கட்டணம் இல்லை.

சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது அஞ்சலகம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் சேர்க்கை பற்றிய விவரங்களை அறிய http://www.ulakaththamizh.in/ என்ற இணைய முகவரியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் தமிழ் முதுகலைப் படிப்பில்(PG Tamil) சேரும் விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசு 15 மாணவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version