Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரோஜா இதழை இப்படி பயன்படுத்தினால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்!

#image_title

ரோஜா இதழை இப்படி பயன்படுத்தினால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்!

கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 5 வயது குழந்தை கூட இன்று கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது. கம்ப்யூட்டர் காலம் என்பதினால் கண் குறைபாடு சிறு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது.

கண் மிகவும் முக்கிய உறுப்பு என்பதினால் இதை பாதுகாப்பது மிகவும் முக்கியம் ஆகும். இதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றலாம்.

தேவைப்படும் பொருட்கள்…

*ரோஜா இதழ்
*ஆவாரம் பூ
*ஆட்டுப்பால்

ஒரு சுத்தமான உரலில் ஒரு ரோஜாவின் இதழ்கள் மற்றும் ஆவாரம்பூ சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு ஆட்டுப்பால் ஊற்றி இடித்துக் கொள்ளவும்.

இதை ஒரு சுத்தமான கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இரண்டு கண்களுக்கு ஒவ்வொரு சொட்டு’என்றவாறு விட்டு படுக்கவும்.

இவ்வாறு 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை தெளிவுபடும். கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் உள்ளிட்டவைகள் சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்…

*பெரு நெல்லிக்காய்
*கடுக்காய்
*தேன்

ஒரு பெரு நெல்லிக்காயை விதை நீக்கி நறுக்கி உலர்த்தி கொள்ளவும். அடுத்து ஒரு கடுக்காயை உலர்த்தி கொள்ளவும். இதை இரண்டையும் அரைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் சரியாகும்.

Exit mobile version