Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் – எச் ராஜா!!

#image_title

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் – எச் ராஜா!!

திமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு சில விவகாரங்கள் குறித்து பேசாமல் இருந்தால் நல்லது.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஆளுநர் ஆதாரங்களை வெளியிட்டால் முதல்வர் என்ன செய்வார்.

நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகவில்லை ஒதுங்கி இருக்கிறேன். அண்ணாமலை உள்ளிட்டோருக்கு உறுதுணையாக அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதற்காகவே ஒதுங்கிய உள்ளேன் என்று அறிவித்தேன்.

கர்நாடகா தேர்தலில் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காகவே அண்ணாமலை பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளவில்லை.

இது அனைத்து மூத்த பாஜக நிர்வாகிகளின் அனுமதி பெற்று தான் அவர் வராமல் கர்நாடகா தேர்தல் பணியில் இருந்தார்.

இதுகுறித்து ஒரு சிலர் அறியாமையால் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என எச் ராஜா பேட்டையளித்துள்ளார்.

Exit mobile version