பழிவாங்குவதற்காக தனியாக இருந்த இளம்பெண்ணை உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் !!

0
106

தனியாக வீட்டிலிருந்த இளம்பெண்ணை உயிரோடு எரித்த கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பர்சோலி கிராமத்தை சேர்ந்த பிரதீப் சிங் என்பவருக்கும் கன்வர் சிங் என்ற குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக பகை வந்துள்ளது. .இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த சண்டையின் காரணமாக கன்வர் சிங் அடித்து கொல்லப்பட்டார்.

இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதீப் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.கன்வர் சிங் கொல்லப்பட்டதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பிரதீபை கொள்ள முயன்றனர்.

இந்த சூழலில் சிறையிலிருந்த கணவனைக் காண சென்ற மனைவி சென்றுள்ளார். அப்போது அவர்களின் மகள் ஷரதா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை அறிந்த கும்பல் வீட்டு வாசலிருந்து குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு மூன்று பேர் வந்து சாரதாவின் கை கால்களை கட்டி போட்டு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.

வலியால் அலறிய ஷரதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து /அவரை மீட்டு அருகிலிருந்த அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால், பலனின்றி ஷரதா உயிரிழந்தார்.உயிரினப்பதற்கு முன்னர் ஷரதா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ,தன்னை 3 பேரை கொடுமைப்படுத்தி உயிரோடு தீ வைத்தனர் என்பதை கூறியுள்ளார்.

இந்த வாக்குமூலத்தை வைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.