வருமான வரி செலுத்துபவர்களுக்கு புத்தாண்டில் ஓர் மகிழ்ச்சியான செய்தி ! தெரிஞ்சிக்க அசையா ?

0
175

வருமான வரி செலுத்துபர்வர்களுக்கு அதிலும் குறிப்பாக கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வெளிவந்துள்ளது. இந்த புதிய ஆண்டில் வாரிசு செலுத்துபவர்கள் 5% மட்டுமே வரி செலுத்தினால் போதும் என்று மகிழ்ச்சிகரமான செய்தியினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் தங்களுக்கு பெரியளவில் வரிச்சலுகை கிடைக்க வேண்டும் என்று நடுத்தர வர்க்கம் முதல் வேலையாட்கள் வரை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது கூறப்பட்டுள்ளபடி, புதிய வரி முறை அல்லது பழைய வரி முறையை ஏற்றுக்கொண்டாலும், இப்போது நீங்கள் அதிக வரி செலுத்த வேண்டியதில்லை. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 5 சதவீதம் மட்டுமே வரி செலுத்த வேண்டும, இதற்கு மேல் கூடுதலாக இவர்கள் வரி எதுவும் செலுத்த வேண்டிய தேவையில்லை. அதேசமயம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறுபவர்கள் வருமான வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலமாக அரசு வரியில்லா வருமானத்தை அதிகரிக்கும். இதுவரை ரூ.2.5 லட்சம் வரை மட்டுமே மக்கள் பலரும் வரி விலக்கு பெற்று வந்த நிலையில், இந்த வரமபை அரசு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னர் இந்த வரம்பு ரூ.2 லட்சமாக இருந்ததை அரசு கடந்த 2014 ஆம் ஆண்டில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தியது.