Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை !!

இன்று இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் , நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 104.54 புள்ளிகள் உயர்ந்து, 40,346 புள்ளியாக தொடங்கியது. இது சராசரியாக வர்த்தகத்தில் 0.41 சதவீதம் உயர்வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 39.35 புள்ளிகள் உயர்ந்து 11,887 புள்ளியாக இன்றைய வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தக சதவீதத்தில் 0.45 உயர்வாகும்.

மேலும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4% ஆகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், தற்போது அதிகபட்சமாக தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 11,850 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version