Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

It is only free in Tamil Nadu! Former Opposition Minister attacked

It is only free in Tamil Nadu! Former Opposition Minister attacked

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாதம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். பல குழப்பங்கள் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க அதிமுக சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்துவதற்கு பதிலாக, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தவும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். வாக்குப்பதிவு நடக்கும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் தான் அடிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

இந்த உள்ளாட்சி தேர்தல் நடப்பதே மாவட்டங்கள் தனித்தனித்யாக பிரித்ததன் காரணமாகதான். அங்கு தேர்தல் நடக்காததன் காரணமாக தற்போது இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

Exit mobile version