என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார்

0
84
#image_title

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார்

நடிகர் காதல் சுகுமார் அவர்கள் காதல் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார். விருமாண்டி, காதல், காதல் அழிவதில்லை என பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். நகைச்சுவை பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் காதல் சுகுமார் அவர்கள் படங்களில் சிறு, சிறு பாத்திரங்களில் தற்போது நடித்த வந்தாலும் பல மேடை நாடகங்களில் நடத்துள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் வடிவேலு அவர்கள் தன்னை ஆள் வைத்து அடித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்குள் இந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தற்போது வெளிப்படையாக காதல் சுகுமார் கூறியுள்ளார்.

அது குறித்து முழு விவரங்களையும் அந்த தற்போது வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் போண்டாமணி மற்றும் நடிகர் முத்துக்காளை ஆகிய இருவரும் தன்னை நடிகர் வடிவேலு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவள் காதல் சுகுமாரனிடம் கூறியதாக தெரிகிறது.

அவரை போய் பார்க்க சென்ற காதல் சுகுமார் அவர்களை நடிகர் வடிவேலு அவர்களிடம் அன்பாக பேசி நலம் விசாரித்துள்ளார். பிறகு தன்னைப் போலவே நடித்து படங்களில் வாய்ப்பு கேட்கிறாயா என மிரட்டி உள்ளார். அதன் பிறகு, 4, 5 ஆட்களை வைத்து கடுமையாக அடித்து மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன காதல் சுகுமார் இனி உங்களை போல நடிக்க மாட்டேன், ஏன் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன் என்று கூறி கூறிவிட்டு பயந்து அங்கிருந்து ஓடி வந்துள்ளார். இந்த சம்பவத்தால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு காதல் சுகுமார் அவர்கள் போய்விட்டார். இதையெல்லாம் அவர் பத்திரிகை ஒன்றில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

ஏற்கனவே நடிகர் வடிவேலு அவர்கள் மீது பல்வேறு நடிகர்கள், நடிகைகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் தற்போது நடிகர் காதல் சுகுமார் அவர்களும் ஆள் வைத்து அடித்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.