Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

#image_title

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்பொழுது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதாவது தென்மேற்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கின்றது.

மேலும் தமிழகத்தில் வீசப்படும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் சில இடங்களில் வானம் மேக மேகமூட்டத்துடன் காணப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version