Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மஞ்சள் காமாலை? உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! 100% தீர்வு தரும் இயற்கை மருத்துவம்!!

#image_title

மஞ்சள் காமாலை? உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! 100% தீர்வு தரும் இயற்கை மருத்துவம்!!

உடலில் பித்தம் அதிகரித்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.இந்த பித்தம் அதிகமாகும் பொழுது வேளையில் இரத்ததில் கலந்து விடுகிறது. இதனால் இரத்தம் சூடேறுதல், வயிற்றில் புளிப்பு தன்மை உண்டாகுதல், சளி பிடித்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும். இதை இயற்கை வழியில் எளிதாக சரி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:-

*கீழாநெல்லி – 50 கிராம்

*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

*பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*சுக்கு – 1 துண்டு

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் ஒரு உரலில் சிறு துண்டு சுக்கு சேர்த்து இடித்துக் கொள்ளவும். இந்த சுக்கை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

பின்னர் 1 தேக்கரண்டி கருப்பு மிளகு மற்றும் 1 தேக்கரண்டி அளவு பெருஞ்சீரகம் சேர்த்து கிண்டி விடவும்.

அடுத்து 50 கிராம் கீழாநெல்லி செடியை எடுத்து தண்ணீர் கொண்டு அலசிக் அதையும் கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

கொதிக்கும் தருணத்தில் 1/4 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி விடவும்.

பின்னர் 1 1/2 டம்ளர் 1 டம்ளராக சுண்டி வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.இந்த கஷாயம் மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

Exit mobile version