Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சரின் அதிரடி பதில்

Jewel loan discount order released

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் நகைக்கடன் தள்ளுபடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் நடந்த முடிந்த சட்டத்தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக, வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகைகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆட்சியமைத்த பிறகு, 110 சட்டத்தின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

பதவியேற்று 6 மாதங்கள் நெருங்கும் நிலையில் மக்களிடையே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? செய்யப்படுமானால் எப்போது என பல கேள்விகள் எழுந்துள்ளன.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மீது பல மோசடிகள் நடந்துள்ளன என தெரிய வந்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ . பெரியசாமி கூறுகையில் நகைக்கடனில் 120 கோடிக்கும் மேலாக மோசடி நடந்து இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.

மேலும் நகைக்கடன் தள்ளுபடி குறித்து இன்னும் 1 வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் எனவும் கூறினார்.

 

 

 

 

 

 

 

Exit mobile version